கதை
தறுதலையா இருக்குற தனுஷ், நயன்தாராவப் பார்த்து, காதலாகி, கசிந்துருகி, டூயட் எல்லாம் பாடி, பின்ன, நயன் வேலை பார்க்குற மென்பொருள் நிறுவனத்துலயே வேலைக்கு சேருறாரு. புரொஜெக்ட்டுக்காக ஆஸ்திரேலியா போன இடத்துல காதல சொன்னா, நயன் மறுத்துடுறாங்க! பின்ன மகன் தனுஷ்-க்காக நயன் கிட்ட பேசப்போன ரகுவரனயும் அவமானப்படுத்தி அனுப்பிடுறாங்க! இதனால, ரகுவரன் இறந்துடுறாரு. (கவரிமான் பரம்பரை!?) சோகத்துல இருக்குற தனுஷ தேத்தறதுக்காக, தனுஷோட நண்பன் கார்த்திக் தன்னோட கல்யாணத்துக்காக, தனுஷ சொந்த ஊருக்கு கூட்டிட்டு போறாரு. அப்பதான் தெரியுது மணப்பெண்தான் நயன்தாரன்னு!! இறுதியில ரெண்டு பேரும் சேந்தாங்களா இல்லையான்னு மீதிப் படத்துல சொல்லியிருக்காங்க!
காதுல பூ:
1) தேவை இல்லாத சண்டை காட்சி
2) வயலில் பாம்பினை பொடலங்காய் என எடுப்பது, அதை ஒட்டிய காட்சிகள்
3) தேவையில்ல நயன்தாரா மது பணம் அருந்தும் காட்சி, அதை ஒட்டிய காட்சிகள்
4) ஒரு பட்டன் தட்டிய உடன் எல்லா காம்ப்யூடர் பழுது ஏற்படுவது அதை தனுஷ் முறியடிபபது.
5) தனுஷ், ஸ்ர்ட் இல்லாமல் வரும் காட்சிகள்
6) நயன்தாரா காதலிப்பது ஏன்? தெளிவான காரணம் இல்லாமை
7) நயன்தாராவின் தங்கையாக வரும் சரண்யாவுக்கு முதலிரவுப் பாடல் கொடுத்ததெல்லாம் ஓவர்
8) பீச் பாடல் மற்றும் ரயில் பாடல்
9) பல கீழ்தரமான காமெடீ காட்சிகள்
10) தெளிவான முடிவு(climax) இல்லாதது
+
1) நயன்தாராவின் தங்கையாக வரும் சரண்யா சில இடங்களில் நயன்தாராவிற்கு அக்காவாகிறார் நடிப்பில்.
2) ரகுவரன்
3) பாடல்கள்
4) ஒரு சில காமெடி காட்சிகள்
சரியான தொடக்கம் சரிவான முடிவு
Monday, April 14, 2008
யாரடி நீ மோகினி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment