Tuesday, April 22, 2008

குருவி படம் விரிவான கதை

வழக்கமான கதை அமைப்பில் வெளிவரும் படமல்ல "குருவி". படத்தின் கதாநாயகன் விஜய் மற்றும் கதாநாயகி திரிஷா இவர்களுக்கு இணையாக, இப்படத்தில் இரு குருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் "குருவி" யின் ஹைலைட்.

பச்சைப் பசேலென எங்கு பார்த்தாலும் பசுமையாக இருக்கும் ஒரு அழகிய கிராமமான "கிழக்குவயல்" தான் நம்ம விஜயின் சொந்த ஊர். அப்படினா இந்த ஊருக்கு மேற்கே இருக்கும் ஊருக்கு என்ன பேருன்னு சொல்லவேண்டிய அவசியம் இல்ல. ஆமா.. நீங்க நெனச்ச மாதிரி அது " மேற்குவயல்" தான். அதுதான் நம்ம திரிஷாவோட சொந்த ஊரு. அதுமட்டுமல்ல.. வழக்கமா எல்லா சினிமாலயும் வர்ற மாதிரி இந்த ரெண்டு ஊருக்காரங்களுக்கும் ஆகவே ஆகாது.

விஜயோட கிழக்குவயல்காரங்க எல்லாரும் குருவி வளர்க்கிறாங்க. இது இவங்க ஊரு பழக்கமாம். குருவி வளர்க்குறதுனா இவங்களுக்கு உயிராம்.

இந்த ஊருக்காரங்க வளர்க்கிற குருவிமேல பொறாமைப்பட்டு, திரிஷாவோட மேற்குவயல் காரங்க கிளி வளர்க்குறாங்க. எல்லாருடைய வீட்டுலயும் குறஞ்சது ரெண்டு கிளியாவது இருக்கும். இந்த ஊருக்காரங்க போன் கூட யூஸ் பண்ணமாட்டாங்களான். கிளிட்ட சொல்லிவிட்டா, அது போயி பக்கத்து தெருவில யாருட்ட போயி தகவல் சொல்லனுமோ, கரெக்டா போயி சொல்லிருமாம். கிரேட்ல.

ஒருநாளு, பக்கத்து டவுண்ல போயி, நம்ம விஜய் கத்திரிக்கா வியாபாரம் பண்ணபோறாரு. தெருத்தெருவா வியாபாரம் பண்ணிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கும்போது, எதிரில ஒரு பொண்ணு, கண்டாங்கி புடவை கட்டி, மிளகாய் பழம் மாதிரி சும்மா செக்கச்செவேனு மோரு வித்துக்கிட்டு வருது. ஆமா.. நீங்க நெனச்ச மாதிரி அது திரிஷாவேதான்.

இப்படி ரெண்டுபேரும் அடிக்கடி தெருவில சந்திச்சதுல, ரெண்டுபேரும் லவ்வுல விழுந்திடுராங்க.

இனிமேலதான் கதை சூடு பிடிக்கப்போகுதுன்னு, படத்தோட இயக்குநர் தரணி சொல்றாரு. ம்..ம்.. அதையும்தான் பார்ப்போமே..

குருவியே வளர்க்கக்கூடாது; எல்லாரும் கிளிதான் வளர்க்கனுங்கிற கொள்கையில இருக்கிற மேற்குவயல் ஊருல, நம்ம திரிஷா மட்டும் குருகி வளர்க்க ஆரம்பிக்குறாங்க. எல்லாம் விஜய் மேல இருக்கிற லவ்வுதான் காரணமாம். இப்படி ஊர்க்கட்டுப்பாட எதிர்த்து திரிஷா குருவி வளர்க்குறது பிடிக்காம, வில்லன் திரிஷாவோட குருவிய தூக்கிக்கிட்டு பக்கத்துல இருக்கிற காட்டுக்குள்ள ஓடிடுறான்.

இதக்கேள்விப்பட்ட நம்ம ஹீரோ விஜய், தன் வீட்டுல வளர்க்கிற குருவி மேல ஏறி, திரிஷாவோட குருவியை தேடுறாரு. பகலெல்லாம் தேடிய களைப்புல, கொஞ்சம் அசந்து இருக்கும்போது, ஒரு பருந்து வந்து விஜயோட குருவியை தூக்கிக்கிட்டு போயிருது. ஹீரோ விஜய், அந்த பருந்து பின்னாலயே போயி, அதோட சண்ட போட்டு, தன்னோட குருவிய மீட்டுடுறாரு. அந்த பருந்த அடிச்ச அடில, அது எல்லா உண்மையையும் சொல்லிருது. வில்லன் அனுப்புன ஆளுதான் நானு; வில்லன் எந்த இடத்துல இருக்காருங்குறதையும் சொல்லிருது.

விஜய் திரும்பவும், தன்னோட குருவி மேல ஏறி, வில்லனை தேடிக் கண்டு பிடிச்சி, சண்டை போடுறாரு. நடந்த துப்பாக்கிச் சண்டையில, வில்லன் சுட்ட எந்த குண்டும் இவ்வளவு பெரிய விஜய் மேல படவே இல்ல. ஆனா, பாவம் அந்த திரிஷாவோட சின்ன குருவியோட கால்ல குண்டடி பட்டுறுது. நல்ல வேளை ஹார்ட்ல படல.

விஜய் வில்லன அடிச்சுப் போட்டுட்டு, அந்த குருவியத் தூக்கிக்கிட்டு, தன்னோட மருத்துவமனைக்கு கொண்டுவந்து, ஆபரேசன் பண்ணி, அந்த குருவியக் காப்பாத்தி, திரிஷா கையில குடுக்குறாரு.

முடிவு: உனக்கு எப்டி ஆபரேசன் பண்ண தெரியும்னு த்ரிஷா கேக்குறாங்க. உடனே நான் டாக்டர்.விஜய்னு சொல்றான். அத்த கேட்டு குருவி அண்ட் த்ரிஷா 3 பெரும் செத்து போறாங்க .

குருவி படம் கதைசுருக்கம்

விஜயும் த்ரிஷாவும் லவ் பண்றாங்க. விஜய் வீட்டில இருக்கற ஆம்பல குருவியும், த்ரிஷா வீட்டில இருக்கற பொம்பள குருவியும் லவ் பண்ணுது. த்ரிஷா வா வில்லன் தூக்கிட்டு போறான், விஜய் குருவிய காக்கா தூக்கிட்டு போகுது. குருவி, த்ரிஷா 2 பேரயும் விஜய் தேடுரார். குருவிய தூக்கிட்டு போன காக்கவ கண்டுபிடுச்சு ஒரு ஃபைட் பண்றார். வில்லன் தான் குருவிய கடத்த சொன்னாண்னு உண்மையா காக்க சொல்லுது. விஜய், காக்க மேல ஊட்காந்து வில்லன் வீட்டுக்கு போய் ஃபைட் பண்றார். கடைசில வில்லன், குருவிய கத்தியால குத்தி விடுகிறான் . ஆனா விஜய் ஆபரேசன் பண்ணி காப்பத்துரார் .

முடிவு: உனக்கு எப்டி ஆபரேசன் பண்ண தெரியும்னு த்ரிஷா கேக்குறாங்க. உடனே நான் டாக்டர்.விஜய்னு சொல்றான். அத்த கேட்டு குருவி அண்ட் த்ரிஷா 3 பெரும் செத்து போறாங்க .

BCCI யின் செயல்பாடுகள்

மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.

இந்தியாவில் வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைக்காத அங்கீகாரம், புகழ், பணம், லைம் லைட் வெளிச்சம் எல்லாமே ஒரே இடத்தில் குவிந்து கிடப்பது என்னவோ கிரிக்கெட்டில் மட்டும்தான். ஆனால் ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட்டையும் Represent செய்வதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் BCCI யின் செயல்பாடுகள் சமீப காலமாய் கட்டுக்கடங்கா சர்வாதிகாரத் தன்மையுடன் சென்று கொண்டிருக்கிறதோ என்று எண்ண வைக்கிறது. அணி வீரர்களுக்கு என்று அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளும், தேர்வு செய்வதற்கு என்று தங்களுக்குள் கடைபிடிக்கும் சில எழுதப் படாத சட்ட திட்டங்களும் வெகு நிச்சயமாய் BCCI யின் மீது வெறுப்பைக் கூட்டிக் கொண்டே செல்கிறது.

இந்திய அணித் தேர்வில் Transparancy இருக்க வேண்டும் என்ற குரல் அவ்வப் போது கடும் கோபத்துடனும், வேகத்துடனும் எழுந்துக் கொண்டுதான் இருக்கின்றது. இது மட்டுமின்றி இந்திய மைதானங்கள், உள்ளூர் போட்டிகள், ஃபாஸ்ட் பவுலிங் பிட்சுகள் போன்ற பல விஷயங்கள் குறித்தான BCCI யின் மீதான பல கேள்விகளுக்கு அவர்கள் தரப்பிலிருந்து, சமாதானமாகவோ, தீர்வாகவோ எந்த ஒரு பதிலையும் இது வரை எவரும் பெற்றிருக்க வில்லை. ஒரு வேளை BCCI விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களோ???

கடந்த வருடம் ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் ஒருவர், பல மாத காலம் ஃபார்மில் இல்லை என்று சொல்லி கழட்டி விடப்பட்ட பின்பும், பல போராட்டங்களிற்குப் பின்பு அணியில் இடம் பிடித்து, தன்னுடைய திறமையை, கோபத்தைக் காட்டியவர், ஒரு கால கட்டத்தில் படு மோசமாய்ச் சொதப்பிக் கொண்டிருந்த இந்திய அணியை,தலைமைப் பொறுப்பேற்று, ஒரு மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு வந்தவர், யுவராஜ், சேவாக், கைஃப், ஸாஹீர், ஹர்பஜன் போன்ற பல வீர்ர்களை வளர்த்தெடுத்தவர், ” Even I would like to die for such a captain” என்று இன்றும் யுவராஜால் மிக மரியாதையாக பார்க்கப்படும் ஒரு வீரர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட் தேர்வுக்குழு தயவு தாட்சணையின்றி ஒரு சிறந்த வீரரை, அதுவும் தன் கிரிக்கெட் வாழ்க்கையின் அதிக பட்ச ஃபார்மில் இருக்கும் போதே நீக்கி இருக்கின்றது.

வெறுமனே சில மாதங்களிற்கு முன்பு பேட்டிங்கின் மூலம் இன்னும் அதிக பட்சமாக தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக ராகுல் டிராவிட் கேப்டன் பொறுப்பிலிருந்து தானாக முன் வந்து விலகி இருந்திரா விட்டால், தான் அணியில் இடம் பெறுவோமோ மாட்டோமா என்ற கவலையுடன் டிராவிட் இப்போது உட்காந்திருக்க வேண்டிய தேவையே வந்திருக்காது. அவரை கழட்டி விட்டிருக்கும் இதே தேர்வாளர்கள், ஒன்று சேர்ந்து டிராவிட் இந்த மூன்று நாடுகள் மோதும் போட்டியில், இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத் தருவார் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று பேட்டி அளித்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

கிரிக்கெட் கான்ட்ரவெர்சியில் சித்து சொன்னது போல தோனிதான் இப்படி விரும்பினார் என்று காரணம் சொல்வதாய் இருந்தால், அணித் தேர்வாளராக அவரையே நியமித்து விடலாமே? அப்புறம் எதற்கு வெங்சர்காரும், ராஜூவும்???

இந்திய அணியை விமர்சித்து நல்வழிப் படுத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு திரியும் இந்த வெங்சர்கார், ரவி சாஸ்திரி, கவாஸ்கர் போன்றோர் மீது என் தனிப்பட்ட குற்றச் சாட்டுகள் என நான் வைக்க விரும்புவது நிறைய்ய இருக்கிறது. வெங்சர்கார் தான் ஆர்ட்டிகிள் எழுத கூடாது என்று BCCI சொன்னால் அதை ஈகோ, பிரச்சினையாக பார்ப்பார். ரவி சாஸ்திரியை இந்திய அணி மேனேஜராய் பொறுப்பேற்று அவர்களை வழி நடத்தச் சொன்னால், முன் வர மாட்டார். ஆனால் கமெண்டரி பாக்ஸில் உட்கார்ந்துக் கொண்டு கொடுத்த காசுக்கு மிச்சமாய் கூவச் சொன்னால் சந்தோஷமாய் செய்வார். இவர்கள் எவரும் தனது தனிப்பட்ட வருமானத்தை உறுதிப் படுத்திக் கொண்டு, ஒரு பொழுது போக்கைப் போல இந்திய அணியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று அவ்வப் போது தோன்றுவதுண்டு.

உலக கிரிக்கெட்டிலேயே மிக லாபகரமான ஒரு அமைப்பாக கருதப் படுவது BCCI தான். ஆனால் BCCI யின் செயல்பாடுகளை சொல்ல சொந்தமாய் ஒரு இணையத் தளம் கூட இன்னும் ஆரம்பிக்காதது, திட்டமிட்டே Transparant முறையை தவிர்க்கும் பொருட்டுதானோ என்று தோன்றுகிறது. http://bcci.cricket.deepthi.com யை விடுங்கள். அது சொந்தத் தளம் இல்லை.

சில காலங்களிற்கு முன்பு, பல வருடங்களாய் எதிர் கேள்வியில்லா தலைவராய் இருந்து வந்தார் ஜக்மோகன் டால்மியா. தனது பதவிக்காலம் முடிந்தும், தன் ஈகோவைத் திருப்தி செய்து கொள்ள கௌரவத் தலைவர் என்று புதிதாய் ஒரு பதவியை ஏற்பாடு செய்து, ஏகபோக ஆட்சி செய்து வந்திருக்கிறார். பின்பு அதுவே பல பிரச்சினைகளுக்குப் பின்பு தேர்தல் நடத்தப் பட்டு சரத் பவார் கையில் கொடுக்கப் பட்டது. அவரது காலத்திலும் சரி, பவாரின் காலத்திலும் சரி BCCI ல் பிரச்சினைகளுக்கு மட்டுமே பஞ்சமே இருந்ததில்லை.

இந்திய கிரிக்கெட் மைதானங்கள் பேட்டிங்குக்கு சாதகமாய் இருக்கும் சூழ்நிலையை மாற்றி, முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாய் சில மைதானங்களை அமைக்க வேண்டும், அதன் மூலம் இந்திய வீரர்களை அயல் நாட்டு மைதானங்களிற்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டும், 125, 132 கி.மீ வேகங்களைத் தாண்டி, 140ஐ சர்வ சாதாரணமாய்த் தொடும் வேகப் பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும், பலகாலமாய் நடத்தி வரும் (அலுத்துப் போன) 5 நாட்கள் விளையாடும் ரஞ்சிப் போட்டி மட்டுமல்லாது, ஒரு நாள் போட்டி, 20 ஓவர், 40 ஓவர்கள் கொண்ட பல்வேறு வகை மாறுபட்ட போட்டிகள் நடத்தவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் பல காலமாய் எழுப்பப் பெற்று வந்தாலும் அதை மதிக்காமல் இருந்து வந்த BCCI, திடீரென்று ஏற்படுத்தப்பட்ட ICL ன் அறிவிப்புகளுக்குப் பின்புதான், அவசர அவசரமாய் முழித்துக் கொண்டு, இனி நாங்களும் இது போன்ற போட்டிகளை நடத்துவோம் என்று அறிவிப்பு செய்கிறது.

இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வாங்கித் தந்தவர், இன்றுவரை தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தவர், 16 வருடம் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தவர், 5 வருடம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாய் இருந்து வழி நடத்திய மிகச் சிறந்த முண்ணனி வீரராக கபில்தேவ் இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் பொருட்டு, ICL என்று ஒரு அமைப்பு தொடங்கக் கூடாதா? ICL ல் பங்கு பெறும் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப் பட மாட்டார்கள் என்று சர்வாதிகாரத்துடன் BCCI அறிவித்த போது கையைக் கட்டிக் கொண்டு வெறுமனே பார்வையாளராகத்தானே பலரால் இருக்க முடிந்தது. தான் விருப்பப் பட்ட அணிக்கு விளையாடும் உரிமையை பெற்றுத் தராமல் அப்புறம் எதற்கும் நாம் ஜனநாயகத்தைப் பற்றியும், தனி மனித சுதந்திரத்தைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும்???

இதே கிரிக்கெட் காண்ட்ரவெர்சியில் சில மாதங்களிற்கு முன்பு, எனக்கு கிரிக்கெட்டைத் தவிர வேறு எதுவும் தெரியாது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கிரிக்கெட் மட்டுமே மூச்சாக இருந்து வந்திருக்கிறேன். இப்போது என்னால் ஆர்ட்டிக்கிள் எழுதியோ, வேறு ஏதேனும் வகையிலோ, அதிகமாய் பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால் அது எதுவுமே, இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் இந்த பொறுப்பிற்கு ஈடாகாது. என்னுடைய 16 வருட பங்களிப்பிற்குப் பிறகும் நேரடியாகவும், மறைமுகமாகவும் நான் கிரிக்கெட்டில் ஈடுபட கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? என்று கபில்தேவ் உணர்ச்சியுடன் கூறிய போதும், பதில் சொல்ல கையாலாகத BCCI அதே விடாப்பிடியுடன்தான் இருந்து வந்திருக்கிறது.

உங்களில் எவரேனும் இளம் வீரர்கள் தேவைதானே? மூத்த வீரர்களை அதிரடியாக நீக்கினால் அப்படி என்ன தவறு என்று கேட்கலாம். நீங்கள் உங்கள் அலுவலகத்தில் வேறு எவரையும் விட சிறப்பான முறையில் பல வருடங்களாய் உழைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நீ எனக்கு தேவையில்லை என்று நிராகரிக்கப் படுவதனால் ஏற்படும் வலியை உங்களால் உணர முடியுமாயின், இதனையும் நீங்கள் உணரலாம்.

என்னுடைய மற்றும் உங்களுடைய எதிர்க்குரல்கள் பெரிய அளவில் மாற்றத்தை உண்டு பண்ணாமல் போகலாம். நாளை இந்த இளம் அணியினர் கூட எப்படியாவது போராடி வெற்றிகளைப் பெற்றுத் தரலாம். நாமும் கூட வழக்கம் போல் பழையதை மறந்து அடுத்த மேட்சை பார்க்க நம்மை தயார் செய்து கொள்ளலாம். ”யங்ஸ்டர்ஸ் கூட பரவாயில்லைப்பா, சுமாரா விளையாடுரானுங்க” என்று ஓவர்களின் நடுவே பேச்சுகளை பரிமாறிக் கொள்ளலாம்.

ஆனால் எது நடந்தாலும் ஒன்றை மாற்ற முடியாது. மரணத்தை விட பெரிய தண்டனை எது தெரியுமா? மறக்கப்படுதலும், நிராகரிக்கப் படுதலும் தான்.

நேற்று கபில் தேவ். இன்று கங்குலி மற்றும் டிராவிட். நாளை அது சச்சினாகவோ, யுவராஜாகவோ, ஏன் தோனியாகக் கூட இருக்கலாம்.

மணி கட்ட ஆளில்லாமல் அப்போதும் பூனை துள்ளிக் குதித்துக் கொண்டுதானிருக்கும். நாம் வழக்கம் போல் அடுத்த போட்டியைப் பார்க்க தயாரகிக் கொண்டிருப்போம்.



click here to see original content

Monday, April 14, 2008

யாரடி நீ மோகினி

கதை

தறுதலையா இருக்குற தனுஷ், நயன்தாராவப் பார்த்து, காதலாகி, கசிந்துருகி, டூயட் எல்லாம் பாடி, பின்ன, நயன் வேலை பார்க்குற மென்பொருள் நிறுவனத்துலயே வேலைக்கு சேருறாரு. புரொஜெக்ட்டுக்காக ஆஸ்திரேலியா போன இடத்துல காதல சொன்னா, நயன் மறுத்துடுறாங்க! பின்ன மகன் தனுஷ்-க்காக நயன் கிட்ட பேசப்போன ரகுவரனயும் அவமானப்படுத்தி அனுப்பிடுறாங்க! இதனால, ரகுவரன் இறந்துடுறாரு. (கவரிமான் பரம்பரை!?) சோகத்துல இருக்குற தனுஷ தேத்தறதுக்காக, தனுஷோட நண்பன் கார்த்திக் தன்னோட கல்யாணத்துக்காக, தனுஷ சொந்த ஊருக்கு கூட்டிட்டு போறாரு. அப்பதான் தெரியுது மணப்பெண்தான் நயன்தாரன்னு!! இறுதியில ரெண்டு பேரும் சேந்தாங்களா இல்லையான்னு மீதிப் படத்துல சொல்லியிருக்காங்க!

காதுல பூ:

1) தேவை இல்லாத சண்டை காட்சி
2) வயலில் பாம்பினை பொடலங்காய் என எடுப்பது, அதை ஒட்டிய காட்சிகள்
3) தேவையில்ல நயன்தாரா மது பணம் அருந்தும் காட்சி, அதை ஒட்டிய காட்சிகள்
4) ஒரு பட்டன் தட்டிய உடன் எல்லா காம்‌ப்யூடர் பழுது ஏற்படுவது அதை தனுஷ் முறியடிபபது.
5) தனுஷ், ஸ்ர்ட் இல்லாமல் வரும் காட்சிகள்
6) நயன்தாரா காதலிப்பது ஏன்? தெளிவான காரணம் இல்லாமை
7) நயன்தாராவின் தங்கையாக வரும் சரண்யாவுக்கு முதலிரவுப் பாடல் கொடுத்ததெல்லாம் ஓவர்
8) பீச் பாடல் மற்றும் ரயில் பாடல்
9) பல கீழ்தரமான காமெடீ காட்சிகள்
10) தெளிவான முடிவு(climax) இல்லாதது

+
1) நயன்தாராவின் தங்கையாக வரும் சரண்யா சில இடங்களில் நயன்தாராவிற்கு அக்காவாகிறார் நடிப்பில்.
2) ரகுவரன்
3) பாடல்கள்
4) ஒரு சில காமெடி காட்சிகள்

சரியான தொடக்கம் சரிவான முடிவு

Saturday, April 12, 2008

`சந்தோஷ் சுப்ரமணியம்' போல் இனி அமையாது -ஜெயம் ரவி சொன்னதும் - சொல்ல நினைத்ததும்

சொன்னதும்

`சந்தோஷ் சுப்ரமணியம்' சிறப்பாக வந்திருக்கும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார் ஜெயம் ரவி. ஒரு நிறைவான படத்தை முடித்த பூரிப்பில் இருந்த ஜெயம் ரவி உடன் ஒரு சந்திப்பு...

`சந்தோஷ் சுப்ரமணியம்' பற்றி...?

இந்தப் படம் எனக்கு முக்கியமானது. இப்படியொரு படத்தில் நான் நடித்ததில்லை. என் அண்ணன் ராஜாவும் இப்படியொரு படத்தை இயக்கியது இல்லை. என்னுடைய இளமையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமோ அதை இதில் செய்திருக்கேன். இதுபோன்ற ஒரு படம் எனக்கோ, என் அண்ணனுக்கோ இனி அமையாது. நான் வேறு நல்ல கேரக்டர்களில் நடிக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் கேரக்டர் எனக்கு இனி திரும்பக் கிடைக்காது.

அண்ணனுடன் பணிபுரியும் அனுபவம் எப்படிப்பட்டது?

ராஜா என்னுடைய அண்ணன் என்றாலும் கொஞ்சம் கூட அவரிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. அவருக்குத் தேவையான நடிப்பை வாங்கிய பிறகே நம்மை விடுவார். இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு மூன்று அண்ணன்கள். சொந்த அண்ணன் ராஜா, சந்தோஷ் சுப்ரமணியத்தின் ஒரிஜினல் பொம்மரிலுவை இயக்கிய பாஸ்கர், அப்புறம் என்னோட கேரக்டரில் நடித்த சித்தார்த்.

இந்த மூன்று பேரின் உழைப்பை நான் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பிரதிபலித்திருக்கிறேன், அவ்வளவுதான்.

படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயம்?

இந்தப் படத்தில் நடித்த ஜெனிலியா, சந்தானம், பிரேம்ஜி, பிரகாஷ் ராஜ், ஒளிப்பதிவாளர்னு எல்லோருமே ஒரு குடும்பம் போல இருந்தோம். அந்த அனுபவம் மறக்க முடியாது.

`சந்தோஷ் சுப்ரமணியம்' எந்த மாதிரி படம்?

எல்லாரும் பார்க்கக் கூடிய வகையிலான சிறப்பு அம்சங்கள் இந்தப் படத்துல இருக்கு. குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கலாம். அதுக்கு எங்கள் யூனிட் கியாரண்டி. அந்தளவு தரமான படமா உருவாக்கியிருக்கோம். கண்டிப்பா இந்தப் படமும் வெற்றி பெறும்.

அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?

'தாம் தூம்' படம் முடிஞ்சிருக்கு. `பேராண்மை'யில் நடிச்சிட்டிருக்கேன். அடுத்து அமீர் டைரக்‌ஷனில் `கண்ணபிரான்' படத்தில் நடிக்கிறேன்.


check the original link : http://tamil.in.msn.com/entertainment/interviews/article.aspx?cp-documentid=1311787

சொல்ல நினைத்ததும்

`சந்தோஷ் சுப்ரமணியம்' பற்றி...?

இந்தப் படம் எனக்கு முக்கியமானது. இப்படியொரு கேவலமான படத்தில் நான் நடித்ததில்லை. என் அண்ணன் ராஜாவும் இப்படியொரு படத்தை இயக்கியது இல்லை (மக்கள்:அப்புறம் ஏண்டா இயக்குனீங்க)
. என்னுடைய இளமையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாமோ அதை இதில் செய்திருக்கேன்.இதுபோன்ற ஒரு படம் எனக்கோ, என் அண்ணனுக்கோ இனி அமையாது(மக்கள்:அப்பாடா நிம்மதி டா). நான் வேறு நல்ல கேரக்டர்களில் நடிக்கலாம்(மக்கள்:நீ என்ன சொல்ல வர்ரெ?). ஆனால் இந்தப் படத்தின் கேரக்டர் எனக்கு இனி திரும்பக் கிடைக்காது(மக்கள்:உங்க அண்ணன் இந்த படத்தையே ரீமேக் பண்ண சொல்லு நீ தான் ஹீரொ ஓகே வா).

அண்ணனுடன் பணிபுரியும் அனுபவம் எப்படிப்பட்டது?

ராஜா என்னுடைய அண்ணன் என்றாலும் கொஞ்சம் கூட அவரிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது(மக்கள்:ஏன் எல்லா படத்தையும் ரீமேக் பண்றான்ல அப்புறம் எப்படி எதிர்பார்க்க முடியும்
). அவருக்குத் தேவையான நடிப்பை வாங்கிய பிறகே நம்மை விடுவார் (மக்கள்:எங்கே இருந்து வாங்குவார் கதை வேற மொழியில் இருந்து,நடிப்பு ?). இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கு மூன்று அண்ணன்கள். டப் (sorry)சொந்த அண்ணன் ராஜா, சந்தோஷ் சுப்ரமணியத்தின் ஒரிஜினல் பொம்மரிலுவை இயக்கிய பாஸ்கர், அப்புறம் என்னோட கேரக்டரில் நடித்த சித்தார்த் (அப்ப ஜெனிலியா உனக்கு அண்ணி,because அவ சித்தார்த் ஆளு பொம்மரிலு படத்துல).

இந்த மூன்று பேரின் உழைப்பை நான் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பிரதிபலித்திருக்கிறேன், அவ்வளவுதான்.

படப்பிடிப்பில் மறக்க முடியாத விஷயம்?

இந்தப் படத்தில் நடித்த ஜெனிலியா, சந்தானம், பிரேம்ஜி, பிரகாஷ் ராஜ், ஒளிப்பதிவாளர்னு எல்லோருமே ஒரு குடும்பம் போல இருந்தோம். அந்த அனுபவம் மறக்க முடியாது(மக்கள்:டப் king அண்ணன் ராஜா இல்லையா ) .

சந்தோஷ் சுப்ரமணியம்' எந்த மாதிரி படம்?

எல்லாரும் பார்க்கக் கூடிய வகையிலான சிறப்பு அம்சங்கள் இந்தப் படத்துல இருக்கு(மக்கள்:என்ன வேன பண்ணு ரெண்டு ஃபைட் நாலு பாட்டு ஒரு இந்தெர்வல் இருக்குல்ல). குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கலாம். அதுக்கு எங்கள் யூனிட் கியாரண்டி(மக்கள்:உன் அண்ணன் கரண்டி). அந்தளவு தரமான படமா உருவாக்கியிருக்கோம்(மக்கள்:தரமானா கீழ் தரமாவா
). கண்டிப்பா இந்தப் படமும் வெற்றி பெறும் (மக்கள்:எந்த படம் வெற்றி பெற்றது னு சொல்றீங்க நா).


அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீங்க?

'தாம் தூம்' படம் முடிஞ்சிருக்கு. `பேராண்மை'யில் நடிச்சிட்டிருக்கேன். அடுத்து அமீர் டைரக்‌ஷனில் `கண்ணபிரான்' படத்தில் நடிக்கிறேன்(பாவம் உன் அண்ணன் அவன் படம் எடுக்ககளிய).

Thursday, April 3, 2008

Software Engineer and his Wife

Conversation between a software engineer and his wife

Husband - hey dear, I am logged in.

Wife - would you like to have some snacks?
Husband - hard disk full.

Wife - have you brought the saree.
Husband - Bad command or file name.

Wife - but I told you about it in morning
Husband - erroneous syntax, abort, retry, cancel.

Wife - hae bhagwan !forget it where's your salary.
Husband - file in use, read only, try after some time.

Wife - at least give me your credit card, i can do some shopping.
Husband - sharing violation, access denied.

Wife - i made a mistake in marrying you.
Husband - data type mismatch.

Wife - you are useless.
Husband - by default.

Wife - who was there with you in the car this morning?
Husband - system unstable press ctrl, alt, del to Reboot.

Wife - what is the relation between you & your Receptionist?
Husband - the only user with write permission.

Wife - what is my value in your life?
Husband - unknown virus detected.

Wife - do you love me or your computer?
Husband - Too many parameters.

Wife - i will go to my dad's house.
Husband - program performed illegal operation, it will Close.

Wife - I will leave you forever.
Husband - close all programs and log out for another User.

Wife - it is worthless talking to you.
Husband - shut down the computer.

Wife - I am going
Husband - Its now safe to turn off your computer