வணக்கம் ஜெயாடிவியின் தலைப்பு செய்திகள்
பெரும்பான்மை பலம் இல்லாத திமுக அரசு இயற்றும் சட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து.
நாம் இன்னும் தோற்கவில்லை. அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா உற்சாகம்
தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் அட்டூழியம்
கன்னியாகுமரியில் திமுகவினர் பயங்கர கொலைவெறி தாக்குதல்.வன்முறை.
சிறப்புச்செய்தி:கலைஞரின் கையாட்டு - பரபரப்பு செய்தி.
இனி விரிவான செய்திகள்:
பெரும்பான்மை பலம் இல்லாமல் பதவியேற்றுள்ள திமுக அரசு தினமும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சிறுபான்மை அரசாக பதிவியேற்ற திமுக அரசு கூறும் திட்டங்கள் எல்லாம் செல்லாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து துக்ளக் சோ கருத்து தெரிவி்க்கையில் சட்டசபையில் பெரும்பான்மையே இல்லாத திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது நகைப்பிற்குரியது என்றார். அடுத்த ஜனாதிபதியாக ஆர்.வி ஒருவேளை மீண்டும் பதவி ஏற்றால் பரம்பரை பகையை மனதில் கொண்டு இந்த ஆட்சியை கலைக்க போராடுவேன் என்று பெருமூச்சுடன் கூறினார் சோ ராமசாமி.
அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் இழந்து இருப்பது தேவையில்லை என்று கண்டித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் தற்கொலை செய்துகொண்டதை சுட்டிகாட்டினார்.அதே சமயம் தற்கொலை செய்து சாகும் அந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் கட்சியின் சார்பில் தரப்படும் என்றும் கூறி தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கூறுகையில் இன்னமும் அ.இ.அ.தி.மு.க தோல்வியை தழுவி விடவில்லை என்றார். இன்னமும் தான்தான் இரவு தலைமை செயலகத்திற்கு போய் விழித்திருந்து ஃபைல் பார்த்துவருவதாகவும் கருணாநிதி காலையில் வந்து வெறும் கையெழுத்து மட்டுமே போடுவதாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அது சமயம் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பினார்கள்.
அஸ்ஸாமில் நேற்று இரவு அல்பைகுட்டி என்ற கிராமத்தில் இரண்டு மணிநேரம் தொலைபேசிகள் வேலை செய்யவில்லை. தொலைதொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் என்ன செய்கிறார் என்று பொதுமக்களும் நடுநிலைமைவாதிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.
நேற்று கன்னியாகுமரியில் கடற்கரையோரம் வாக்கிங் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையில் கிடந்த கல் ஒன்றில் இடித்துகொண்டதில் கால் சுண்டுவிரல் சுளுக்கிக் கொண்டது. திமுக அமைச்சரின் வீட்டிற்கு மிக அருகில் அதாவது ஐம்பது கிலோமீட்டர் அருகில் நடந்த இந்த சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடப்பது பொதுமக்கள் மத்தியில் பீதியை எழுப்பி உள்ளது.
நேற்று கருணாநிதி தலைமை செயலகத்திற்கு வந்துகொண்டிருந்தபோது கடற்கரை சாலையில் ஒரு ஆளுக்கு கையாட்டி டாட்டா கூறினார். நமது சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் கலைஞர் டாட்டா காண்பித்த தொண்ணூறு வயதான அந்த ஆளின் சகோதரர் 1967 ல் சிக்னல் இன்றி ரோட்டை கிராஸ் செய்த வழக்கில் அபராதம் கட்டியவர் என்று தெரியவந்தது.இது போன்ற கிரிமினல்களுடன் கருணாநிதி தொடர்பு வைத்திருப்பதுப்பற்றி நடுநிலையாளர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ட்ராபிக் சார்ஜென்ட்டுக்கள் மற்றும் அதிமுகவினரின் கருத்துக்கள் நாளை முதல் ஒரு வாரத்திற்கு கலைஞரின் கையாட்டு என்ற பெயரில் உங்கள் ஜெயா டிவியில் காலையும் மாலையும் ஒளிப்பரப்பாகும்.
இத்துடன் ஜெயா செய்திகள் முடிவடைந்தன.
Thursday, January 31, 2008
ஜெயா செய்திகள்
Friday, January 25, 2008
கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்
முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!
எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.
க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...
வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.
க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?
வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.
க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...
வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.
க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?
வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.
க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?
வி: என்னங்கணா?
க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...
வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.
க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?
வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)
க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!
வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி
க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...
வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.
க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.
வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...
க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?
வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)
இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)
க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?
வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல
க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?
வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.
க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?
வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.
க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...
க: ஏன்டா தமிழன் தமிழன்னு ஒரு படம் நடிச்சியே அது கதை கேட்டு தான் நடிச்சியா?
வி: டைரக்டர் ரெண்டே வரில எனக்கு கதை சொன்னாருணா... ஒரு தறுதலை தபால் தலையில் வருகிறான். இது தான்ணா அதோட கதை.
க: டேய் ரெண்டு வரில சொல்றதுக்கு அது என்னடா திருக்குறளா? கதை கேக்கறதுக்கு ஒனக்கு ஒரு மணி நேரமாகுமாடா? காசு போடறது எவனோ, படம் பாக்கறது எவனோங்கற தைரியத்துல நீ நடிச்சிட்டு இருக்க. யூத்னு ஒரு படம் நடிச்சியே அது நியாபகம் இருக்கா?
வி: அது மறக்கக்கூடிய படமாணா? ஆல் தோட்ட பூபதி பாட்டுக்கு தமிழ் நாடே ஆடுச்சேணா...
க: அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு. அதுல எதுக்குடா உனக்கு வெக்க வேண்டிய பேரை விவேக்குக்கு வெச்சிங்க?
வி: அது என்ன பேருங்கணா? நியாபகம் இல்லையே!!!
க: கருத்து கந்தசாமி. படம் முழுக்க கருத்து சொல்லியே மக்கள கொன்னுட்டனு உன் பேருல பொது நல வழக்கு வேற இன்னும் இருக்காம்.
வி: அண்ணா என்னங்கணா இதுக்கெல்லாம் போயி டென்ஷனாகிட்டு.
க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்?
வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!
க:டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா? உன்னைய என்ன பண்றதுன்னே தெரியலையே. அதுல க்ளைமாக்ஸ் அதுக்கு மேல கொடுமை. வண்டில சைட் ஸ்டேண்ட் தட்டிவிட்டு ஆக்ஸிடெண்ட் ஆன ஒரே ஆள் நீதான்டா.
வி: என்னங்கணா இப்படி திட்றீங்க. நீங்க ரொம்ப மோசம்.
க: டேய் விஜய் மண்டையா! உன்னைய நம்பி காசு கொடுத்து தைரியமா வந்தா நீ இப்படி புதுமை பண்றேனு டகாட்டி வேலை பண்ணா உன்னைய என்ன பண்றது? நீயே சொல்லு அந்த திருமலை படமெல்லாம் மனுசன் பார்க்க முடியுமா? அதுல கடைசி சீன்ல நீ பேசற பஞ்ச் டயலாக் கொடுமை தாங்காம வில்லனே திருந்திடறான். நாங்க பாவம் என்ன பண்ணுவோம்?
வி: !@#$%
க: சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க?
(விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)
க: சொல்லு மேன்!
வி: அது வேற மேட்சுங்கணா. அதுல லோக்கல் டீமோட கில்லி டீம் ஆடுதுண்ணா. இது தமிழ்நாடுக்காக கலந்துக்கற மேட்ச்ணா. (ஒரு வழியாக சமாளிக்கிறார் விஜய்)
க: டேய் டக்கால்டி மண்டையா. தமிழ் நாடு டீம்ல தான் ஓட்டேரி நரி, டுமீல் குப்பம் வவ்வாலு, ஆதி வாசி எல்லாம் இருக்கறாங்களாடா? சும்மா அடிச்சு விடாதடா.
வி: போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க.
க: அது சரி. கில்லி கூட பரவால. அந்த மதுரனு ஒரு படம் நடிச்சியே அது மனசன் பாப்பானாடா? மீசைய ட்ரிம் பண்ணி கைல டேட்டு கூத்துனா அடையாளம் தெரியாதுனு தமிழ் நாட்டுக்கு புது டெக்னிக் சொல்லி கொடுத்ததே நீ தான்டா.
வி: ஏன்ணா அவன் மட்டும் கோட்டு போட்டா அடையாளம் தெரியாதுனு நடிக்கல?
க: அவன் எவன்டா?
வி: பேரெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அந்த படத்த பேரோட க்ளூ தரேன். 'ஜ'ல ஆரம்பிச்சி 'னா'ல முடியும்.
க: ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்.
அது எப்படிடா தைரியமா அந்த பேரரசு படத்துல எல்லாம் நடிச்ச?
வி: அண்ணா. அவர் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர மாதிரி புதுசா சிந்திக்கிற டைரக்டரே தமிழ்நாட்ல கிடையாதுங்கணா.
க: டேய் அவன் போன வாரம் தான் துவைச்சு காயப்போட்டேன். இந்த மூஞ்சில சந்தனத்த பூசினா அடையாளம் தெரியாதுனுங்கறதெல்லாம் பெரிய சிந்தனையாடா. அவனை சொல்லக்கூடாது. முதல்ல உங்கள போட்டு நாலு சாத்து சாத்தனா சரியா போயிடும். இனிமே அவன் கூட சேராத. புரியுதா?
வி: சரிங்கண்ணா.
க: அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?
வி: இல்லைங்களேணா. ஒரு தடவை தானே நடிச்சேன்.
க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.
வி: ஓ! குஷி படத்துலயும் சச்சின் படத்துலயும் ஒரே கதையாணா? அது எனக்கு தெரியாதே!
க: அடங்கொக்கா மக்கா. நீ நடிக்கிற படத்து கத உனக்கே தெரியாதா? ஒழுங்கா கதைய கேட்டு நடி. உன்னைய நம்பி காசு கொடுத்து வந்து அடிக்கடி எல்லாரும் ஏமாந்து போறோம். அப்பறம் இன்னோரு விஷயம் தெலுகு படம் பாக்கறத குறைச்சிக்கோ. நம்ம ஊர்லயே நல்ல டைரக்டருங்க எல்லாம் அருமையான கதையோட இருக்காங்க. நீ ஒழுங்க கதை கேட்டு நடி. அப்பறம் பஞ்ச் டயலாக் பேசறத இன்னையோட நிறுத்திடு. ஓகேவா?
வி: சரிங்கண்ணா... இனிமே ஒழுங்கா நடிக்கிறேன்னா... அப்படியே எல்லாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிமே உங்களை ஏமாத்தாம ஒழுங்கா கதை கேட்டு நடிக்கிறேங்க.
வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் அதுல கீழ இருக்கறவன் மேல வருவான் மேல இருக்கவன் கீழ போவான். ஆதி ஃப்ளாப் ஆயிடுச்சினு போக்கிரிய மிஸ் பண்ணிடாதீங்க...
க: டேய். இப்பதான சொன்னேன். இனிமே நீ மட்டும் பஞ்ச் டயலாக் பேசின உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஒழுங்கா ஓடி போயிடு...
(கவுண்டர் துரத்த... விஜய் எஸ்கேப் ஆகிறார்)
Wednesday, January 23, 2008
பில்லா 2007 சொட்டை மனோகர் டவுட்?
பில்லா படத்தை பற்றி எல்லோரும் அலசி காயப்போட்டு விட்டாங்க. இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை என்று ஆனபிறகு நாம என்னத்தை சொல்வது! பில்லா படம் சுமாராக இருக்க என்ன காரணம் என்று பாக்கலாம்.
கதை ஒன்றும் புதிய கதை இல்லை என்பதால் கதை பற்றி விமர்சனம் தேவை இல்லை.
படம் சுமாராக இருக்க காரணம் அஜித்தின் கடின உழைப்பு என்றால் மிகையாகாது. அப்படி என்னா உழைப்பு என்று நீங்ககேட்கலாம்.
1) வித விதமான கோட் ஷூட் போட்டுக்கிட்டு f tvயில் பசங்க கேட் வாக் போவாங்க (அத எப்ப நாம பார்த்து இருக்கோம், பொண்ணுங்க ஷோவுக்கு நடுவே விளம்பரம் போடுவாங்கஅப்ப பார்த்தது)அது போல நடக்க கடின பயிற்ச்சி எடுத்து இருக்கார்.
2) அதிகம் பேசாமல் இருந்து இருக்கிறார். (சிட்டிசனில் வரும்: எலே கலெக்ட்டரூரூரூ , நான் தானா வளர்ந்த காட்டு மரம் போன்ற தன் டயலாக் பேசி தன் திறமையை காட்டாமல் இருக்கிறார்)
3) பார்க்க அஜித் அழகாக இருக்கிறார்.
படத்தில் எனக்கு பிடித்தவை:
1)செய் பாட்டுக்கு டான்ஸ் ஆடும் பெண், ஹீரோயின் நயன் தாராவை விட அழகாக இருக்காங்க.
2)பின்னனி இசை
3)அஜித்தின் நடப்பு (நடிப்பு அல்ல).
சொட்டை மனோகர் டவுட்:
1)அஜித் அடிக்க கேன் கேன் என்று கேட்கிறீங்களே கிருஸ்னாயில் வாங்கவா, இல்லை பெட்ரோல் வாங்கவா?
2) ஏம்மா நயன் ஏதோ முத்து குளிக்க போவது போல் உடம்ப ஒட்டி டிரஸ் போட்டு இருக்கீங்களே அது எதுக்கு?
3) பெண் டிரைவ் பெண் டிரைவ் என்று சொல்லி ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தேடுறீங்க பெண் டிரைவ்வை தேடனும் என்றால் ரோட்டில் போய் நின்னா பெண் டிரைவை நிறைய பார்கலாமே!!!
கருத்து கந்தசாமி:
அஜித் கடைசியா படத்தில் நீங்க சொல்றீங்க I am wired ஆனா படம் பார்க்கும் மக்கள் we are very tired என்று சொல்றாங்களே அது ஏனுங்கோ!!!
பழநி
”ஈஸியா சீவுறதுக்கு இளநின்னு நெனைச்சியா? பழனிடா” பேரரசுவின் ட்ரேட்மார்க் பஞ்ச் டயலாக்கோடு தொடங்குகிறது படம். சின்ன தளபதி பரத் (?) சரியாக முளைக்காத மீசையை வேறு முறுக்கிவிட்டிருக்கிறார். தாவூ தீருது இவுங்களாண்ட...
அப்பாவுடன் கள்ள உறவு வைத்திருக்கும் பெண்ணை சிறுவயதிலேயே கொலை செய்து ஜெயிலுக்கு போகிறார் ஹீரோ. இதனால் குடும்பம் சிதறுகிறது. தாய் இறந்துவிடுகிறார். கொலை செய்து குடும்பத்துக்கு அவப்பழி ஏற்படுத்திய தம்பி மீது அக்கா கோபமாக இருக்கிறார். ஜெயிலில் இருந்து திரும்பிய தம்பி அக்காவை சமாதானப்படுத்த தம்பி என்பதை காட்டிக் கொள்ளாமலேயே அக்கா வீட்டில் வேலைக்காரனாக வேலை செய்கிறார். அக்கா புருஷனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு. பிரச்சினைகளுக்கு ‘ஆப்பு' வைத்து குடும்பம் ஒன்றாகிறது. சல்பேட்டாவுக்கு தொட்டுக்க ஊறுகாய் மாதிரி அவ்வப்போது ஹீரோயின். அரதபழசலான மகாபாரத காலத்து கதைக்கு ஆங்காங்கே தொடர்பில்லாமல் ஆக்ஷன் பிட்டுகளை அள்ளித் தெளித்து கொத்து பரோட்டா போட்டுத் தந்திருக்கிறார் பேரரசு.
ரோடு ரோலர் சைஸில் குஷ்பு ஹீரோவுக்கு அக்காவாக வருகிறார். பரத்துக்கு நன்றாக டான்ஸ் ஆட வருகிறது. அடியாள்களை புரட்டியெடுப்பதும் ஓக்கே. படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்டாக ஐஸ்வர்யாவை (ராய் அல்ல) சொல்லலாம். கட்டை குரலில் மிரட்டுகிறார். சப்பென்று உயிரை விட்டு விடுகிறார்.
படத்தில் தனியாக காமெடியன்கள் யாரும் இல்லையென்ற குறையை இயக்குனரே போக்கிவிடுகிறார். போலிஸ் அதிகாரியாக ‘திருத்தணி' என்ற பெயரில் அவர் இடம்பெறும் ஒரே காட்சி வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது. பாக்யராஜ் போல இருந்துகொண்டு பேரரசு பஞ்ச் டயலாக் பேசுவதைப் பார்க்கும்போது தமிழ் திரையுலகம் எதிர்காலத்திலும் கூட ஹாலிவுட் ரேஞ்சுக்கு போக வாய்ப்பில்லை என்றே அறிய முடிகிறது.
”இது ஆரம்பமில்லே.. பூகம்பம்” மாதிரி பட்டாசு டயலாக்குகளும், ”பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா சரியான ஆப்பு வைத்தாயப்பா” ரேஞ்சு பேக்கிரவுண்டு குத்துப்பாட்டுக்களும் தியேட்டரை விட்டு எல்லோரையும் கதிகலங்கி ஓடவைக்கிறது. படம் பார்க்கும் சில லேடீஸ் கூட புடவையை லுங்கி மாதிரி மடித்து கட்டிக்கொண்டு தம் அடிக்க வெளியே செல்லுமளவுக்கு பாடல்கள். இதே பார்முலாவில் தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருந்தால் பேரரசுவை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு கோவணம் கூட மிஞ்சாது என்பது உறுதி.
பேரரசு ச(கா)ப்தம்
நெறய தமிழ் பட போஸ்டர்ல எல்லாம் பார்த்து இருப்பீங்க " இந்த பொங்கல்/தீபாவளிக்கு மிரட்ட வருகிறது " அப்படின்னு போட்டு படம் பேரு போட்டிருக்கும். ஆனா ஒரு படத்தோட டைரக்டர் பேரை கேட்டாலே அவனவன் மெரண்டு ஓடுறான்னா அந்தப் பெருமை நம்ம "பெருந்தொந்தரவு" பேரரசுக்கு மட்டும்தான். இவரோட முதல் படம் "திருப்பாச்சி" -க்கு நானும் நண்பன் ஹரியும் ஈரோடு அபிராமி தியேட்டருக்கு பொங்கலுக்கு ரெண்டு நாள் கழிச்சு நைட் ஷோ போய் உக்காந்தோம். இது நடந்தது ஒரு ரெண்டு வருசம் முன்னாடி.படத்துல முதல் ரெண்டு மூணு சீன் பாத்தவுடனேயே எங்களுக்கு நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்னு தெரிஞ்சிடுச்சு. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரம் கழிச்சு படத்துல சாமிக்கு ரெண்டு மூணு ஆடுங்கள பலி குடுக்கற சீன் வந்தது.எனக்கு என்னமோ அங்க ஆட்டு மூஞ்சிக்கு பதிலா ஹரியோட முகமும்,என்னோட முகமும் தான் தெரியுது. நாங்க ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டு "ரைட்ரா , இன்னைக்கு என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துடலாம்னு " முடிவு பண்ணிட்டு ரெடி ஆயிட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இளைய தளபதி முகத்துல சந்தனம் குங்குமம் பூசி அடையாளம் மாறுகிற சீன் வந்தப்போ எங்களால தாங்க முடியல. "சூப்பரப்பு"அப்படினு சொல்லிக்கிட்டு நல்லா கை தட்டி கெக்கே பிக்கேனு விழுந்து சிரிச்சுட்டு சுத்திப் பார்த்தா எல்லோரும் எங்களை ஒரு மாதிரி கொலை வெறியோட பார்க்குறானுங்க. "நண்பா, இடம், பொருள் ,நேரம் தெரியாம காமெடி பண்ணிட்டமோ" அப்படீனுட்டு அதுக்கு அப்புறம் ரொம்ப உஷாரா இருந்தோம்.A/C வேற நிறுத்திட்டானுங்க. அந்தக் கடுப்பு வேற.கொஞ்ச நேரம் கழிச்சு ஹரி ஆரம்பிச்சுட்டான். ஸ்கிரீன்ல படம் ஓடுறப்பவே இங்க கீழே திரை விமர்சனம் பண்ணி கிழிச்சு தொங்க விட்டுக்கிட்டு இருந்தான்.பாட்டெல்லாம் வேற "கீரைக்கட்டு, பக்கெட்டு, டிக்கெட்டு, ராக்கெட்டு" னு ரொம்ப இலக்கியத்தரமா இருந்ததுனால ஒண்ணும் முடியலை எங்களாலே.ஏதோ கும்பிடப்போன தெய்வம் தலைவி (Ex-தலைவி??) த்ரிஷா அப்பப்போ வெயிலுக்கு வேப்பங்காத்தா ( என்ன உவமை!. த்ரிஷாவை நினைச்சாலே பொங்கிட்டு வருது ) வந்து எங்களை காப்பாத்துனாங்க. ஒரு வழியா படம் முடிஞ்சு குத்துயிரும் குலையுயிருமா எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டோம். அன்னைக்கு முடிவு பண்ணுனதுதான்,இனி பேரரசு பக்கம் தலை வச்சு கூட படுக்கறது இல்லைனு.
ஆனா,நம்ம தமிழ் ரசிகர்கள் ரொம்ப நல்லவங்க ஆச்சே.அந்த படத்தையும் ஓட வச்சுட்டாங்க.நம்ம பேரரசுவும் கலைத்தாயை குரல்வளையை நெரிச்சுக் கொல்லாம விடுறது இல்லைங்கற முடிவோட அடுத்து மீண்டும் இளைய தளபதிய(அநேகமா இவரையும் அடுத்து ஹிட் லிஸ்ட்-ல சேர்த்தணும்னு நினைக்கிறேன்) வச்சு "சிவகாசி " படம் ,அதுவும் தீபாவளிக்கு. அந்த வருசத்துல இருந்து பொங்கல்,தீபாவளி வந்தாலே எங்க இந்த பேரரசு பய ஏதாவது படம் ரிலீஸ் பண்ணிடுவானோன்னு பயமாவே இருக்கு. இந்த படத்துல பேரரசு நடிச்சது மட்டும் இல்லாம இவருக்கு பன்ச் டயலாக் வேற.சீட்டுக்கு அடியிலே லக்ஷ்மி வெடி வெடிசச effect-லதான் எல்லோரும் தியேட்டரை விட்டு வெளியே வந்தாங்க. " உங்கம்மா எங்கம்மா நம்மை சேர்த்து வைப்பாளா, சும்மா அட சும்மா நம்மை பெத்து விட்டாளா" அப்படினு பெற்றோர்களின் கடமையை விளக்கு வைத்து வெளிச்சம் போட்டு காட்டும் பாட்டு இந்த படத்தோட சிறப்பு அம்சம்.
இதுக்கு அடுத்து "தல" அஜீத் தெரியாம இவரை நம்பி "திருப்பதி " படம் குடுத்துட்டார்.இவரோ "தல"ய "தறுதல" ஆக்கிட்டார் இந்த படத்துல.இவரு ஏறக்குறைய ஹீரோ மாதிரி(உவ்வே சொல்லவே குமட்டிகிட்டு வருது) நடிச்சு அஜீத்தை காமெடியன் ஆக்கிட்டார்.இந்த படம் பார்த்த பீதியிலே, பேதி ஆகித்தான் பாலா "நான் கடவுள்" படத்துல இருந்து அஜீத்தை தூக்கிட்டதா ஒரு பேச்சு.
இதுக்கு அடுத்து நடந்ததுதான் பெஸ்ட் காமெடி.அடுத்த படம் "தர்மபுரி" அதுவும் யாரு கேப்டன் விஜயகாந்தை வச்சு. "சனி தனியா வந்தாலே சமாளிக்க முடியாது.இங்க துணைக்கு ஆள் கூட்டிக்கிட்டு வருதே"னு எங்களுக்கு கண்ணெல்லாம் இருண்டுடுச்சு.ஆனா இந்த படம் கேப்டனோட அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையா அமைஞ்சது.இனி இவன விட்டா இது மாதிரி நிறைய படம் நடிச்சு நம்மளை கொன்னுடுவான்னு மக்கள் உஷாராகி பேசாம இவரை M.L.A ஆக்கிட்டா படத்துல நடிக்க மாட்டார் நம்ம எஸ்கேப் ஆயிடலாம்னு ப்ளான் பண்ணி வோட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டாங்க.இந்த உண்மை புரியாம கேப்டன் இப்பவும் போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் "என் அரசியல் வாழ்க்கையை தூக்கி விட்டதே தம்பி பேரரசுதான்னு கண்ணு கலங்கி சொல்லிக்கிட்டு இருக்காரு.
நம்ம ஆளை பத்தி இன்னும் நெறய சொல்லிக்கிட்டே போகலாம்.ஏதோ இப்போ தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சுதாரிச்சு கொஞ்ச நாளா இவர் படம் எதுவும் வராம நாட்டுல அமைதி நிலவுது.இருந்தாலும் இவர் கலைச்சேவை என்னோட வேற ஒரு பதிவுல சொன்ன மாதிரி "அரச்ச மாவை அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா" லெவல்ல நடந்துகிட்டுதான் இருக்கு. இதனால சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால் பேரரசு படம்னா அந்த படம் ஓடுற தியேட்டர் பக்கம் சூடம் காட்டி, தேங்காய் ஒடச்சு, பெரிய கும்பிடா போட்டுட்டு அப்படியே ஓடியே போயிடுங்க.மீறி படம் பாக்க போனா உங்க உயிருக்கோ,மனநல,குணநல மாறுதல்களுக்கோ யாரும் உததரவாதம் இல்லை.
பீமா
ரீலிஸ் ஆன இரண்டாவது நாளே கவுன்டரில் டிக்கெட் கிடைத்தது என் பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தேன்.அது அப்படி இல்லை என்று படம் முடிந்து வெளியே வரும் போது தான் தெரிந்தது.
படத்தின் ஹீரோவாக அடித்திருப்பவர்...சாரி நடித்திருப்பவர் சேது,அந்நியன் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருக்கும் விக்ரம்.வில்லனாக நடித்திருப்பவர் பாட்ஷா படத்தில் நடித்த ரகுவரன்.படத்தை இயக்கியிருப்பவர் ஆனந்தம்,ரன் இவற்றின் இயக்குனர் லிங்குசாமி.இப்படியெல்லாம் மடத்தனமாக :-)) நினைத்துக் கொண்டு உள்ளே செல்லாதீர்கள்!!.
படத்தின் கதை...
சென்னையில் பணிபுரியும்(!) ஒரு நல்ல ரவுடி பிரகாஷ்ராஜ்.(காட்பாதர் மாதிரி, நாயகன் மாதிரி,பாட்ஷா மாதிரி, அப்புறம் சரி வேண்டாம் விடுங்க)
இவர் போட்டுத்தள்ள நினைக்கும் ஆட்களை இவருக்கு முன் போட்டுத் தள்ளுகிறார் விக்ரம்.யாருடா நீ? என்று பிரகாஷ் கோபமாகக் கேட்க விக்ரம் உன்கிட்ட வேலைக்கு சேரணும்னு தான் இதெல்லாம் செஞ்சேன் என்கிறார்.
வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே விக்ரமின் புஜபலபராக்கிரமத்தைப் பார்த்து "25 வருசங்களுக்கு முன்பு நான் என்னையே பார்த்த மாதிரி இருக்கு" யாருடா நீ?(வழக்கமான டயலாக்) அப்படின்னு கேட்க... பிளாஷ்பேக்.
சிறுவனான விக்ரமிற்கு தப்புகளைத் தட்டிக்கேட்கும் பிரகாஷ்ராஜ் ஒரு ஹீரோவாகத் தெரிகிறார்.ஒரு கட்டத்தில் விக்ரமின் அப்பாவை அடித்தவர்களைப் பிரகாஷ் அடிக்க, விக்ரமும் பெரியவன் ஆனவுடன் தாமும் பிரகாஷ்ராஜ் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரிடம் வந்து சேர்கிறார்.
இந்நிலையில் திரிசாவை ஏதேச்சையாக அவர் வீட்டு மேல்பகுதியை பிரித்து வந்து பார்க்கிறார்.இரண்டு,மூன்று சீன்களிலேயே திரிசா காதலிக்கிறார்.
பிரகாஷ்ராஜின் எதிரி ரகுவரன்.அவரும் ஒரு ரவுடி தான்.(கெட்ட ரவுடி!!).பிரகாஷ்ராஜிற்கு விக்ரம் அவருடைய பழைய காதலியையே திருமணம் செய்து வைக்கிறார்.
ரகுவரன்,பிரகாஷ்ராஜ் கும்பல் அடிக்கடி மோதிக்கொள்கிறது.இரண்டு பக்கமும் ஆட்கள் இறக்கிறார்கள்.பிரகாஷ்ராஜ் ரகுவரனைவிட பெரிதாக வளர்கிறார்.
சென்னைக்கு புது போலீஸ் கமிஷனராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி எல்லா ரவுடிகளையும் என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ள உத்தரவிடுகிறார்.
விக்ரமிற்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரிசாவுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆசைவர...முடிவில் என்ன ஆனது என்பது தான் கிளைமாக்ஸ்.
விக்ரம் இந்தப்படம் முழுக்க யாரையாவது அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அதற்கே நேரம் போய்விடுவதால் நடிப்பதற்கு நேரமேயில்லை.
திரிசா மூன்றாவது சீனிலேயே விக்ரமை காதலித்து விட்டு அவ்வப்போது டூயட்டிற்கு மட்டும் வருகிறார்.
ரகுவரனின் வில்லத்தனத்தைப் பார்த்து தியேட்டரில் அனைவரும் சிரிக்கிறார்கள்.படத்தில் காமெடி இல்லை என்ற குறையைத் தீர்த்து வைப்பது ரகுவரனின் வில்லத்தனம் தான்.
படத்தின் ஒரே ஆறுதல் பிரகாஷ்ராஜ் தான்.நன்றாக நடித்துள்ளார்.ஆனால் ஏற்கனவே பல முறை இதே போல் பார்த்துவிட்டதால் nothing special.
படத்தின் வசனங்கள் எஸ்.ராமகிருஷ்னணன்.பாபாவில் தொடங்கி இந்தப் படம் வரை தனக்கு சினிமா வசங்கள் எழுத வராது என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.(சார் உங்க துணையெழுத்து படிச்சிட்டு பல நேரங்கள்ள கண்ல இருந்து தண்ணி வந்திருக்கு)ப்ச்..
"முதன்முறை" என்ற பாடல் மட்டும் பரவாயில்லை.ஒரு பாட்டிற்கு ஷெரீன் வந்து குத்தாட்டம் போடுகிறார்.நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு இங்கெல்லாம் பாடல் வரும் என்று சொன்னால் அங்கெல்லாம் பாடல் வருகிறது ஒரே சலிப்பு...
கேமரா, எடிட்டிங் எல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை..
2007 ல் ரவுடிகள் படமாக வந்து கொண்டிருந்ததே...அப்போதே வந்திருக்க வேண்டிய படம்.தமிழ்சினிமாவின் டிரெண்ட் மாறிவிட்ட இந்நிலையில் too late...
முடிவில் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள்.நம்மையும் சேர்த்து...
படத்தில் ரத்த ஆறு ஓடுவதால், பாடல்கள் தனிமை பெற்று விடுகின்றன. படத்தின் பெரும்பகுதி மோதல்... துரத்தல்... சண்டை... என இருப்பதால் படத்தின் இயக்குனர் லிங்குசாமியா அல்லது கனல் கண்ணனா என்று சந்தேகம் வந்து விடுகிறது.
பரிந்துரை:
இதற்கு மேல் உங்கள் இஷ்டம்!!!!
பின்குறிப்பு:
படம் முடிந்து பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தால் அங்கு ஒருவர் என் வண்டியில் அவருடைய சாவியை நுழைத்துக் கொண்டிருந்தார்.பாஸ் என்ன இது ? என்று கேட்டதற்கு சாரி பாஸ் பீமா எபக்ட் என்றார்.
என்ன கொடுமை சார் இது??
Sunday, January 20, 2008
ராமராஜன் - சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சா
இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன் " பார்ட் - II
நம்ம டவுசர் புகழ் கி " ராமராஜன் " ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் .
ராமராஜன் - CEO/CTO
கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.
செந்தில் - டீம் லீட்
ஜுனியர் பாலைய்யா - சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் .
கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.
காட்சி 1:
புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் அதில் சேர அனைவரும் தயங்குகிறார்கள் .
ராரா: ஏன்னா நமக்கு இந்த பிராஜக்ட் தேவையா ? வேற யாருக்காவது அவுட் சோர்ஸ் பண்ணிடலாம்னு சொன்னாலும் கேக்கமாட்றிங்க !!! வேலை செய்யறதுக்கு எவனும் வர மாட்றான்னு கிளைண்டுக்கு சொல்ல சொல்லி மானத்தை வாங்கறிங்க !!!
கவுண்ட்ஸ் : என்ன தம்பி அப்படி சொல்லிட்ட . இந்த பிராஜக்ட்டை யார் யார் பண்ணாங்கனு தெரியுமில்லை .
ரா .ரா: யார் யாரு???
கவுண்ட்ஸ்: முதல்ல அசன்ச்சர் மெயிண்டயின் பண்ணாங்க ! அப்பறம் டி .சி. எஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ் பண்ணாங்க! அப்பறம் இன்போஸிஸ்ல இருந்து பிரிஞ்ஜி போன ஐ -கதவு மெயிண்டெயின் பண்ணாங்க!!! இப்ப கடைசியா நம்ம கைல வந்து சேர்ந்திருக்கு !!!
செந்தில் கவுண்டர் காதில் ஏதோ சொல்ல கவுண்டர் டென்ஷனாகி ஒரு அரை விடுகிறார் .
கவுண்ட்ஸ் : யாரப் பார்த்து இந்த கேள்வியக் கேட்ட ...
ரா. ரா: ஏன்ன அடிச்சிங்க ???
கவுண்ட்ஸ் : ஏன் அடிச்சனா ? இவன் என்ன கேள்வி கேட்டான் தெரியுமா ? அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட ???
....
2 நிமிடம் கழித்து
கவுண்ட்ஸ் :அது ஏன்டா என்ன பாத்து அந்த கேள்வியக் கேட்ட? இத்தனை பேர் இருக்காங்களே அவுங்களை கேக்க கூடாதா ?
1 நிமிடம் கழித்து :
கவுண்ட்ஸ் : ஹும் !!! ஐயோ !!! அது ஏன்டா என்ன பாத்து கேட்ட ?
மீண்டும் செந்திலுக்கு ஒரு அரை விழுகிறது .
ரா . ரா: ஏன்னா சும்மா போட்டு அடிச்சிட்டே இருக்கீங்க? அப்படி என்னதான் கேட்டான் ?
கவுண்ட்ஸ் : என்ன கேட்டானா ? பிராஜக்ட்ட நம்ம மெயிண்டயின் பண்றோம் ... ஐ - கதவு முதலாளி மேல கேஸ் பொட்டுச்சே ஒரு பொண்ணு அதை யாரு மெயிண்டயின் பண்றாங்கனு கேக்கறான் .
ஜி . பாலையா : ஹாஹாஹா
கவுண்ட்ஸ் : அந்த பொண்ண யாரு மெயிண்டேயின் பண்றாங்கனு கணக்கெடுக்கறதா என் வேலை . இல்லை இதுக்கு முன்னாடி நான் அந்த வேலையப் பாத்துட்டு இருந்தனா . ஒரு பிராஜக்ட் மேனஜரைப் பார்த்துக் கேக்கறக் கேள்வியாய இது ? கேக்கறதையும் கேட்டுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி ஒக்காந்திருக்கான் பாரு பேரிக்கா மண்டையன் .
காட்சி - 2:
செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார் . பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார் .
புதுசு : நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது . 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும் , சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு ...
கவுண்ட்ஸ் : ஏய் ஏய்... நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா ?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய போட்டலயாவது பாத்திருக்கயா?
புதுசு : இல்ல
கவுண்ட்ஸ் : அப்பறம் எதை வச்சிடா இந்த மூஞ்சி நாரயண மூர்த்தி அந்த மூஞ்சி சுதா மூர்த்தினு சொன்ன ... ஏய் சொல்லு ...சொல்லு
புதுசு : சொல்றங்க !!! அவர்தான் இந்த மாதிரி சொன்னா அப்ரைசல்ல எல்லா டாஸ்க்குகும் " A" போட்றன்னு சொன்னாருங்க ..அதுவும் அந்த பிராஜக்ட் மேனஜர் காதுல விழற மாதிரி சொல்லுனு சொன்னாருங்க!!!
கவுண்ட்ஸ் : ஓடிப்போ நாயே!!! ( செந்திலைப் பார்த்து ): ஏண்டா இப்படி பண்ண?
செந்தில் : ஒரு விளம்பரம்தான்...
கவுண்ட்ஸ் : ஏண்டா!!! இந்த onsiteல இருக்கறவந்தான் இப்படி பில்ட் அப் கொடுக்கறான் !!! நமக்கு எதுக்குட இதெல்லாம்?
( சரளாவைப் பார்த்து ): அவன்கூட சேர்ந்துகிட்டு நீ என்னடி பெரிய இது மாதிரி?
லொல்லு????
கோ . சரளா: தோ !! கொஞ்சம் சும்மா இருக்கீகளா !!! என்னை TCS ல கூப்டாகோ, Wipro ல கூப்டாகோ , infosysல கூப்டாகோ அங்க எல்லாம் போகமா என் கிரகம் இந்த கூட்டத்துல மாட்டிகிட்டேன் ...
கவுண்ட்ஸ் : ஹிம்ம்ம்ம்ம்ம்...... ரெட்மாண்ட்ல Microsoft கூப்டாகோ, கலிபோர்னியால Oracle ல கூப்டாகோ, நியூ யார்க்ல IBM ல கூப்டாகோ .... என்னடி கலர் கலரா ரீல் விடர? இண்டர்வியூல நீ பம்பனது மறந்துபோச்சா ?
கோ . சரளா : ஹிக்க்க்க்ம் ... இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை ...
கவுண்ட்ஸ் : ஒழுக்கமா ரெண்டு பெரும் வாய மூடிக்கிட்டு வேலையப் பாருங்க !!! இல்லைனா ரெண்டுப் பேத்தையும் வேலைய விட்டு தூக்கிடுவன் ! ஜாக்கிரதை !!!
ரெண்டு பேரும் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்கள் ...
Saturday, January 19, 2008
புதிய டாக்டர்ஸ்
ஆளாளுக்கு டாக்டர் பட்டம் குடுத்து, அதுக்கு இருந்த மரியாதையே போச்சு.
அது சரி, நம்ம ஆளுங்க எதுக்கு இப்பிடி வெறித்தனமா இருக்காய்ங்க பட்டம் குடுக்க?
திலகம், வேள், வாணர், லட்சியம், சூப்பரு, தல, புர்ச்சி, தளபதி, இளையxxx, வெண்ணன்னுட்டு அப்பிடியே திராவிடக் கச்சிகளோட இலவசம் மாதிரி அள்ளி அள்ளிக் குடுகுறாய்ங்க.
நடிகன்களுக்கு மட்டும் இல்ல, அரசியல்வாதிகளுக்கும் (வியாதிகள்??) பட்டம் வாங்குறதும் சரி குடுக்குறதும் சரி, கொஞ்சம் கூட வெக்கமேயில்லாம இருக்காங்க.
ஒவ்வொரு கட்சியிலையும் அஞ்சாறு தளபதிங்க (இளைய தளபதி, மூத்த தளபதி ன்னு), தானைக்குத் தலைவர், புர்ச்சிக்குத் தலைவி, கப்பல் இல்லாமையே கேப்டன், காத்தடிச்சாலே விழறவருக்குப் புசலு, விடிவெள்ளி, ஆடிவெள்ளி அப்பிடின்னு ஏகப்பட்டது.
சமீபத்துல, சாதனை செஞ்ச நம்ம புர்ச்சி தளபதி (எந்தப் படையிலே இருந்தாரோ என்ன எழவோ) விசய்க்கும், அரிய பெரிய கருத்துக்கள சினிமா மூலமா கொடுத்து கல்லா கட்ற சங்கர் சாருக்கும் இந்தப் பட்டத்த கொடுத்து இருக்காங்க.
ஒரு பத்திரிக்கையிலே இப்பத்தான் படிச்சேன்.. இந்தப் பட்டங்கள்லாம் செல்லாதாம்! ஒழுங்கா பட்டம் குடுக்கனும்னா, நம்ம கவர்னரு கையில போய் சொல்லி அனுமதி வாங்கனுமாம். இவிங்க வாங்கலையாம்.
என்னப் பெரிய காரியம்? கவர்னரு அய்யாவுக்கும் ஒரு பட்டம் தரேன்னு சொல்லி அனுமதி வாங்க வேண்டியதுதான். இந்த மாதிரி அனுமதி குடுக்குறதுக்குத்தானே அவரு இங்கே மொழி தெரியாத மானிலத்துல குப்ப கொட்றாரு. மொழி தெரிஞ்சவர கவர்னரா போட்டா டவுசர் கிழிஞ்சுடும்னு இதுக்குதான் மொழி தெரியாதவய்ங்கள இப்பிடி போட்றாங்களோ?
என்ன கருமமோ, நம்ம நாட்ல டாக்டருக்கு பஞ்சமில்லப்பா. ஆனா, குப்பனுக்கும் சுப்பனுக்கும் வைத்தியம் பாக்கத்தான் நாதியில்ல.
ஓ....... அது வேற டாக்டருங்களா?
Saturday, January 12, 2008
ஆ(வ்)ஸ்திரேலியாவும் அம்பையரும்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் அடுத்து வரப்போகும் சில ஆட்டங்களின் நிலை குறித்த பரபரப்பான காட்சிகள்..
என்னப்பா எட்டு பேர் தான் அவுட் ஆகியிருக்காங்க..? ஆல் அவுட்னு அம்பையர் கிளம்ப சொல்றார்?
ஷ்.. இது ஆஸ்திரேலியா மறந்து போச்சா? கத்தி பேசாத... பைன் போட்டுருவாங்க...
===================================================
சார் மணி மத்தியானம் பதினொன்னு தான் ஆகுது.. சூரியன் சுள்ளுன்னு அடிக்குது.. ஒரு விக்கெட் தான் இருக்கு.. அஞ்சு ஓவர் போட்டா ஆல் அவுட் ஆகிடுவாங்க... பேட் லைட்னு(BAD LIGHT) ஆட்டத்தை கேன்சல் பண்றீங்க... ?
ஆமாய்யா கண்ணு கூசுற அளவுக்கு வெயில் அடிச்சா அது பேட் லைட் தானே? நான்சென்ஸ்...
===================================================
இவர் இப்ப தானே அவுட் ஆனார்? மறுபடி ஆட வர்றார்?
அவர் கருப்பினத்தை சேர்ந்தவர்னு தானே அவர் ஆட கூடாqதுன்னு பிரச்சினை பண்றீங்க? யூ ஆர் சஸ்பெண்டட் ஃபார் 3 மேட்சஸ்....
***
என்னப்பா என்ன பிரச்சினை?
ஆஸ்திரேலியா கேப்டன் அவங்க போலர்ஸ் ஸ்டம்புக்கு போடற பந்தையெல்லாம் இந்தியா பேட்ஸ்மேன் பேட்டால தடுத்துடறாங்கன்னு கம்பிளெயின்ட் பண்ணிட்டிருக்கிறாராம்...
***
அம்பையர் சார் சொன்னா நம்புங்க சார்.. ஸ்டேடியத்த விட்டு பால் வெளிய போனா அது சிக்சர் தான் சார்.. ஸ்டேடியத்தை விட்டு பந்தை வெளிய அடிச்சா அவுட்டுன்னு எப்போ ரூலை மாத்தினாங்க...
***
என்னயா டென்ஷனா இருக்கே?
என்னய்யா அநியாயமா இருக்கு... உணவு இடைவேளை முடிஞ்சு பேட்ஸ்மேன் உள்ளே வந்துட்டு இருந்தாங்க. க்ரீசுக்கு வரதுக்குள்ள ரெண்டு பேரையும் ரன் அவுட் பண்ணிட்டாங்க...
***
ஆனாலும் நம்ம ராமசாமிக்கு ரொம்ப நக்கல்...
எப்படி சொல்றே?
பேசாம அம்பையர்களுக்கும் ஆஸ்திரேலியா டீம் யுனிபார்ம் போட்டு விட்டுருங்கன்னு நக்கல் அடிக்கிறார்...
***
ஏன் நம்ம டீம் கேப்டன் கலங்கி போய் இருக்கார்?
அவர் அடிச்ச பந்தை அம்பையரே கேட்ச் பிடிச்சுட்டு அவுட்டும் கொடுத்துட்டாராம்...
Tuesday, January 8, 2008
ராமர் பாலமும் வானரங்களும்...
இந்திய அமெரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு வித்தை காட்டிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளின் கையில் இப்போது சேதுசமுத்திர திட்ட பூமாலை.ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு ராமருக்காகவும் அவரின் பாலத்திற்காகவும் தங்கள் உடல்பொருள் ஆவி அனைத்தையும் துறக்க சபதமேற்று செயல்படுகிறா தியாக திருவிளையாடலை நூறு கோடி சனங்களும் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பதால் ஊடகங்களுக்கு அடுத்த சில வாரங்களுக்கு பிழைப்புக்கு பஞ்சமிருக்காது.
ஆண்டுகள் பலவாய் கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டத்தினை கடந்த பாரதீயஜனதா தலைமையிலான கூட்டனி அரசு தூசிதட்டி அதை ஆராய ஒரு குழுவமைத்து பின் திட்ட அறிக்கை தயார்செய்து நிதியெல்லாம் ஒதுக்கி...வைக்கோவும்,கலைஞரும் தங்கள் அப்பன் வீட்டு சொத்திலிருந்து இந்த திட்டத்திற்கு பணம் தருவதைப் போல இதற்கு உரிமை கொண்டாடிய கூத்துக்களை நிறைய பேர் மறந்திருப்பீர்கள்....
புதிதாய் வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆர்பாட்டமாய் ஒரு விழா நடத்தி இத்திட்டத்தை துவக்க பிடித்தது சனி....நமது முன்னாள் முதல்வர் அம்மையார் அவர்கள் சுற்று சூழல் ஆர்வலராய் மாறி இது கூடாது என எழுப்பிய கூச்சல் காற்றில் கரைந்து போனதை நினைவில் வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
ப்ராஜக்ட்
படிக்க ஒரு ஊரு………. ப்ராஜக்ட் செய்ய ஒரு ஊரு……..
கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட்டின் தலையெழுத்துக்கு….
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆம், ஈரோடில் படித்த நான்…..
ஐ டி பீல்டு அமுங்கிப் போயிருக்கும் சென்னைக்கு ப்ராஜக்ட் செய்யப் போனேன். சென்னை என்னை ரீ சைக்கில் பின் போல ஆக்கியது.
டாஸ் படிக்க கூட வழியில்லாத எனக்கு ASP.NET யில் ப்ராஜக்ட் செய்யச் சொன்னான் ஒருவன்!
இருக்கும் சைட்டையே ஒழுங்காய்ப் பார்க்க முடியவில்லை, இந்த லட்சனத்தில் வெப்சைட் ப்ராஜக்ட் டாம்!
ஆண்மையா அரைவேக்காட்டுத்தனமா....
சேது சமுத்திர திட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு துவக்கி வைக்கும் போது பின்னாளில் தங்களின் பிழைப்புக்கு வழிகோலும் பிரச்சினையாக மாறுமென மதவாத அரசியல் கட்சிகளும்(வாதிகளும்) கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.
தங்களின் பாரம்பரியங்களை கட்டிகாப்பாற்றும் இவர்களுக்கு அமெரிக்க நாசா சொல்லும் வரையில் இந்த பாலம் இருந்ததே தெரியாது என்றுதான் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதற்கு முன்னர் வரை இவர்கள் இதை 'ஆடம்ஸ் ப்ரிட்ஜ்' என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தனர்.தரைக்கு கீழே ஓடும் சரஸ்வதி நதியை பற்றி எழுதிவைத்த புராணங்கள் இந்த பாலம் இந்த இடத்தில் மகாகணம் பொருந்திய ஸ்ரீமான் ராமச்சந்திர மூர்த்தியினால் கட்டப்பட்டது என குறித்து வைக்காமல் போனது மிக துர்பாக்கிய நிகழ்வு.
சற்றேறக்குறைய இரண்டாயிரம் கோடி ரூபாயை கடலில் கொட்டும் வரை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென மூக்கு வியர்த்து காவியும் கமண்டலமுமாய் கிளம்பி ராமேஸ்வரத்திற்கு கள்ள ரயிலேறி வந்து தங்களின் பக்தியையும் பண்பாட்டினையும் நிலைநிறுத்திச் சென்றவர்களுக்கு, இந்த பிரச்சினைதான் மீண்டும் தங்களை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தும் என தெரிந்ததும் பாலத்தை வைத்து குரங்கு வித்தை காட்டத் துவங்கியதும் அதை உசுப்பிவிடும் வகையில் நமது முதல்வரவர்கள் அரைவேக்காட்டுத் தனமாய் ஒரு கருத்தைச் சொல்லப் போக பிரச்சினை சுருசுருவென பற்றிக்கொண்டு விட்டது.
இந்த திட்டத்திற்காய் உடல்பொருள் ஆவியெல்லாம் தருவேன் என தமிழகமெங்கும் மேடையேறி அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்த 'வைக்கோ' நிச்சயமாய் அம்னீஷியாவினால் பாதிக்கப் பட்டிருக்க வேண்டுமென்பது என்னுடை தீர்மானமான கருத்து. இல்லையென்றால் இன்னேரம் துள்ளிக்குதித்து தெருவிற்கு வந்திருப்பார்தானே...நம்முடைய துரதிர்ஷ்டம் இலங்கை தமிழர்களுக்கு இடரென்றால்தான் அவரது தசையாடும் போலும்.
இந்த திட்டம் வந்தால் முதலில் பவழப்பாறை திட்டுக்கள் எல்லாம் அழிந்து போய் சுற்றுப்புற சூழல் மாசுபடுமென கவலைப்பட்டு இயற்கை ஆர்வலராய் அவதாரமெடுத்த நம்து முன்னாள் முதல்வர் அருமைத் தலைவி, பொன்மனச்செல்வி அம்மா அவர்கள் பின்னாளில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என சூளுரைத்த காண்டத்தை அநேகமாய் எல்லோரும் மறந்திருப்பீர்கள் என்கிற தைரியத்தில் இந்த வழியாக் கப்பல் போனால் செலவு கூடுமென பொருளாதார நிபுணராகி திட்டத்தை இப்போது எதிர்க்கிறார்.
குடும்பத்தில் குழப்பம், கூட்டணியில் குத்துவெட்டு வீட்டுக்குள் வேகத்தை காட்டமுடியாத தலைவர் தன் கோவத்தையும், எரிச்சலையும் சபையில் ராமர் மீதும், உச்சநீதிமன்றம் மீதும் காட்டி பிரச்சினைக்கு மேலும் தீ வார்க்கிறார்.
இயற்கையில் உருவான மணல் திட்டு என நிலவியல்,கடலியல் துறை வல்லுனர்கள் கூவிக்கூவி சொன்னாலும் எந்த மடையன் காதிலும் விழவில்லை. அவனவனுக்கு அவனவன் கஷ்டம்...அதை வெளியில் சொல்லமுடியாமல் கொள்கை, வெங்காயம், பண்பாடு என கூத்தடிக்கின்றனர்.
காண்ட்ராக்டர்களிடம் வாங்கிய கமிஷனுக்காய் ஒருவர், வருமானம் போய்விடுமே என்கிற அச்சத்தில் இலங்கையில் இருந்து வரும் நெருக்கடிக்கு விலை போய் கூச்சலிடும் ஒருவர்..எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டுமென நினைக்கும் புண்ணியவதி, மதத்தின் பெயரால் மக்களை மடையர்களாக்கி பதவி சுகம் காண நினைக்கும் இந்துத்வவியாதிகள்...இருக்கிற ஆட்சியதிகாரத்தை காப்பாற்ற எந்தளவும் கீழிறங்க தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள், இவர்களுக்கிடையில் முந்திரிக்கொட்டையாய் கருத்துச் சொல்லும் நீதிமான்கள்....
மொத்தத்தில் அனைவருக்கும் தங்கள் சொந்த லாபநஷ்டங்களே முன்னால் நிற்கின்றன. இதைத்தான் பொதுநலமென வாய்ஜாலமாய் விற்றுக்கொண்டிருக்கின்றனர். நாம் அரை வேக்காடுகளாய் ஆளுக்கொரு பக்கம் நின்று லாவனி பேசிக்கொண்டிருக்கிறோம்.
300 மீட்டர்/அடிக்கு ஒரு மணல் திட்டை அகற்றுவதால் தமிழகத்தில் ஆறு கடற்கரையோர மாவட்டங்களில் தொழில்வாய்ப்பும்,ராமேஸ்வரம்,தூத்துக்குடி,கடலூர் போன்ற துறைமுகங்களுக்கு நன்மையும் இதனால் அரசிற்கு கணிசமாய் வருவாயும், கப்பல்களுக்கு எரிபொருள் சேமிப்பும் வருவதை தங்கள் சொந்த ஆசாபாசங்களுக்காய் வீறுகொண்டெழுந்து வீதி நாடகம் போடும் இவர்களையா ஆண்மையாளர்கள் என்பது...அரைவேக்காடுகளா! விழித்துக் கொள்ளுங்கள்.
தமிழ் சினிமாவும் கம்ப்யூட்டரும் ..
தமிழ் சினிமாவில் கம்ப்யூட்டர் என்றாலே ரமணாவில் கேப்டன் விண்டோஸ் மீடியா பிளேயரில் டைப் செய்வதை மட்டும் நினைத்து சிரிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு இது
- த்ரிஷா கஷ்டப் பட்டு மவுசை ஆட்டி ஆட்டி சூர்யா பக்கத்தில் போய் நிக்கும் அந்த காட்சி(’பார்க்காத என் பார்க்காத’)..
-சிங்காரவேலனில் ‘பாப்பாவுக்கு கொஞ்சம் டிரஸ் போட்டு காட்டுங்களேனு’ கமல் கம்ப்யூட்டர் விஞ்ஞானியிடம் கேட்க்கும் காட்சி.
-தாஸ் படத்தில் தீவிரவாதிகள் பாம் வைக்கும் காட்சி
வீராசாமி - வி.ஐ.பி கமெண்ட்ஸ்
டி.ஆரின் வீராசாமி பார்த்துவிட்டு வந்த வி.ஐ.பிக்களின் எக்ஸ்க்ளுசிவ் கமெண்ட்ஸ் வெட்டிப்பயலுக்கு கிடைத்திருக்கிறது
வைகோ…
1960களிலே தமிழன் தென்னமெரிக்காவில் அருமையான படங்களை தயாரித்து ஆஸ்கர் அவார்டுகளை வாங்கினான் என்பது தமிழர் வீர வரலாறு. அதை நான் என்றும் மறந்தவனில்லை.
ஆனால் அதை இன்று இந்த _முக அரசு மறந்து வீரத்தை விற்று கோழைகளாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.
இதை எதிர்த்து எங்கள் இளைஞர் படை கோவை கற்பகம் காம்ப்லக்ஸிலிருந்து நடை பயணத்தை ஆரம்பிக்க போகிறது என்பதை இப்போது தெரிவித்து கொள்கிறேன்.
__முகவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தாலும் எங்கள் கொள்கையிலிருந்து நாங்கள் விலகவில்லை என்பதை இதன் மூலம் நீங்கள் உணரலாம்.
டி. ராஜேந்தர் திடீர் பேட்டி
என்னடா ஆடுறான் கிரிக்கெட்டு
சட சடன்னு விழுது விக்கெட்டு.
தூக்கி அடிச்சாத்தான் சிக்சரு
என்ன செய்யுறான் மேட்ச் ஃபிக்சரு?
சச்சின் எடுத்து வந்தார் பெரிய மட்டை
ஸ்கோர் போர்ட்டப் பாத்தா முட்டை
தங்கச்சி அழாதம்மா..அடுத்த உலகக்கோப்பைல எல்லா லீக் மேச்சும் பெர்முடாகூட ஆடுறமாதிரி செஞ்சுரலாம்.
பெர்முடா(ஸ்) கிழிஞ்சுச்சுன்னா தச்சு போட்டுக்கலாம்.. இந்தியா கிழிஞ்சுதுன்னா?
அந்த நாள் ஞாபகம் …
1981 ஆம் ஆண்டு, இடம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம். 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0 - 1 என இந்தியா பின் தங்கி இருந்த நிலையில் கடைசி ஆட்டத்தின் நான்காவது நாள், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி பந்து வீச வேகமாக ஓடி வருகிறார். கவாஸ்கர் தடுத்தாட முயற்சிக்கிறார். விக்கெட் முன் கால் என்ற வகையில் முறையில் நடுவரிடம் முறையிடப் படுகிறது. நடுவர் ரெக்ஸ் வொயிட்ஹெட் கவாஸ்கர் ஆட்டமிழந்தார் என கைத்தூக்க , பந்து மட்டையில் பட்டது என புலம்பிக் கொண்டே மைதானத்தில் வெளியேறிக் கொண்டு இருக்கையில் திடிரென திரும்பி மறுமுனையில் நின்ற மற்றொரு துவக்க ஆட்டக்காரரான சேத்தன் சௌகானையும் அழைத்துககொண்டு மைதானத்தில் இருந்து வெளியேற எத்தனிக்கையில் அப்போதிய அணி மேலாளர் விங் கமாண்டர் துரானி மைதானத்தின் எல்லைக்கு வந்து கவாஸ்கரை சமாதனப் சமாதனப் படுத்தி சேதன் சௌகானை திரும்ப அனுப்பி ஆட்டத்தை தொடரச் செய்தார்.
இந்த ஆட்டத்தின் முக்கிய திருப்பு முனையாக இது அமைந்தது எனக் கூறலாம். 324 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அன்றிரவு நடந்த ஒரு விருந்தில் இந்தியக் கிரிக்கெட்டைப் பற்றி ஏளனமாக ஆட்டக்காரர்களின் முன்னிலையிலேயே பேசப்பட்டதாம். காயம் காரணமாக பந்து வீச முடியுமா என்று சூழலில் இருந்த கபில்தேவ் வலி நிவாரண மருந்துகளை உட்கொண்டு பந்து வீச ஆரம்பித்தார். Cricket is a glorious game of uncertainities என்பது மற்றொரு முறை நிருபணமானது. ஆம் கபில்தேவி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியாவை 83 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 1- 1 என்று தொடரையும் சமன் செய்தது.
Tuesday, January 1, 2008
கல்லூரி
+2 வில் சேர்ந்து படிக்கும் 9 நண்பர்கள்(4 பெண்கள்,5 ஆண்கள்) மதுரைக்கு அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஒன்றாக B.A வரலாறு பிரிவில் சேர்கிறார்கள்.அங்கு குடும்ப சூழ்நிலை காரணமாக டெல்லியில் படிக்க வேண்டிய பெண் (தமன்னா) தற்காலிகமாக அந்த கல்லூரியில் வந்து சேர்ந்துள்ளது.ஆரம்பத்தில் இவர்களோடு ஒட்டாமல் இருக்கும் அந்தப் பெண், ராகிங்கில் இருந்து காப்பாற்றியவுடன் இவர்களோடு நட்பு கொள்கிறது.நட்பின் காரணமாக டெல்லியில் இருந்து படிக்க வரும் வாய்ப்பையும் மறுக்கிறது.
"எங்களுக்குள் காதல் வராது , நட்பு மட்டுமே வாழ்க்கை முழுவதும் தொடரும்" என்ற நண்பர்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தகர்த்து அகிலிற்கும், தமன்னாவிற்கும் காதல் வருகிறது.
இது சரியா? தவறா? என்ற குழப்பம் இருவருக்கும் தீர்வதற்குள் அனைவரும் ஒரு பேருந்தில் கல்விச் சுற்றுலா செல்கிறார்கள்.இவர்கள் காதல் நண்பர்களுக்குத் தெரியவரும் வேளையில்....தியேட்டரில் நிசப்தம்.அனைவரும் கனத்த மனதுடன் வெளியே வருகின்றனர்.(அப்பாடா கிளைமேக்ஸ் என்னன்னு சொல்லல)
படத்தின் ஆரம்பத்தில் வரும் பஸ் பாடல் காட்சியிலேயே நம்மைக் கல்லூரி மூடிற்கு கொண்டு வந்து விடுகிறார் பாலாஜி சக்திவேல்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயல்பாகவே உலவ விட்டிருப்பது படத்தின் சிறப்பு.எல்லோரும் சினிமாத்தனமாக இல்லாமல் நிசத்தில் நாம் பார்க்கும் மனிதர்கள் போலவே இருக்கிறார்கள்.
அகிலும்,தமன்னாவும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளார்கள். கயல்விழியாக வரும் பெண் பட்டய கிளப்பி உள்ளார்.குடும்ப நிலை உண்ர்ந்து படிப்பது, தப்பு செய்பவர்களின் சட்டையைப் பிடிப்பது, தமன்னா தன் காதல் பற்றி சொல்லும் போது அதைப் புரிந்து கொள்வது என அத்தனையும் அழகு.
ஆதிலட்சுமியாக வரும் பெண், சரவணணாக வரும் பையன் அகிலின் தங்கை, தமன்னாவை ஒரு தலையாக லவ் பன்னும் சீனியர் என அனைவரும் நம் நினைவில் நிற்பார்கள்.
ஒரே காட்சியில்,9 மாணவர்களின் குடும்ப கஷ்டங்களையும் உறுத்தாமல் காட்டியிருப்பது கவிதை.
இரட்டையர்களாக வந்து "ஏங்க நீங்க சொல்லுங்க? ஏன் நீங்க சொல்லக்கூடாதா" என்ற ஒரு டயலாக் மட்டும் வைத்துக் கொண்டு படம் முழுக்க வந்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் இரண்டு பேர்.
பாலாஜி சக்திவேல் காட்சிகளால் கவிதை வடிக்கிறார் என்றால்,நா.முத்துக்குமார் கவிதைகளால் காட்சி அமைக்கிறார்.(சரியா? தவறா? பாடல் மிகச் சிறந்த உதாரணம்.)பாடல்கள் அத்தனையும் அருமை.
செழியனின் கேமரா இயல்பாக உறுத்தாமல் எல்லாவற்றையும் படம் பிடித்துள்ளது.
ஹைகோர்ட்டில் தூக்குத் தண்டணை உறுதியாகி உள்ள இந்த சூழலில், ஆந்திர அரசியல் போல் காட்டினாலும் அந்த சம்பவத்தை அழுத்தமாக காட்டியுள்ளது இயக்குநரின் துணிச்சல்.(ஐயையோ கிளைமேக்ஸ சொல்லிட்டேனா???)
இவ்வளவு இருந்தும் படம் சற்று மெதுவாக நகர்வது போன்ற உணர்வு.படத்தில் சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன.(உ.ம் கயல்விழி கோபிப்பது, இரட்டையர்கள் காட்சி)
கதையும் ஏப்ரல் மாதத்தில்,பிரியாத வரம் வேண்டும் போன்ற கல்லூரிகளில் பார்த்தது தான்.(காதல் படத்தில மட்டும் கத புதுசோ??)
நம் உணர்ச்சிகளை வைத்து இவர்கள் வியாபாரம் செய்வது மட்டும் நெருடல்.
பரிந்துரை:
எல்லோரும் பார்க்கலாம்.